Tamil Jokes
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்.
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: தப்பிச்சேன்…. இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்.
ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே….. எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: ? ? ?
{ ம்ம்ம்….. இப்படித்தான் ரிலாக்ஸா சிரிக்கணும் }
================================================
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
————————————————————————————
கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…